நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இச்சிமரம் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் சாலையை கடந்ததால் வாகனங்கள் நிருத்தப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வருவது வழக்கம் இந்நிலையில் குட்டியுடன் 9 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வடுகன் தோட்டம் அருகே முகாமிட்டிருந்தது இதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர் இன்று மாலை இச்சிமரம் அருகே காட்டு யானைகளை வனத்துறையினர் இரு புறங்களிலும் வாகனத்தை நிறுத்தி சாலையை கடக்க செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்