நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை தண்ணீரை ஊற்றி விரட்டும் குடியிருப்பு வாசிகளின் வீடியோ தற்போது வைரல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியதால் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வருவது வழக்கம் இந்நிலையில் குட்டியுடன் காட்டு யானைகள்
கடந்த ஒரு மாதமாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் அருகே முகாமிட்டிருந்தது இதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் அனைத்து யானைகளும் பர்லியார் பகுதியிலிருந்து கல்லார் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் பர்லியார் குடியிருப்பு பகுதியில் யானைகளை விரட்ட குடியிருப்பு வாசிகள் யானைகளின் மீது தண்ணீரை ஊற்றி யானைகளை விரட்டும் வீடியோ தற்போது வைரலாகி பரப்பரப்பபை ஏற்படுத்தி உள்ளது
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்