நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் சாலையில் நான்கு கரடிகள் உலா வந்தது. இதனை கிராம மக்கள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்களை யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது செய்தியாளர்:கரன்சி சிவக்குமார்