Followers

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த முயன்ற காட்டு யானை வனத்துறையினரையும் குடியிருப்புவாசிகளையும் துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த முயன்ற காட்டு யானை வனத்துறையினரையும் குடியிருப்புவாசிகளையும் துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..


 பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகள் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது இதனால் மனித உயிர் பலிகளும் ஏற்பட்டு வரும் இந் நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை திடீரென வனத்துறையினரையும் குடியிருப்பு வாசிகளையும் ஆக்ரோசமாக தாக்க துரத்தியது உடனே அவர்கள் வீட்டிற்குள் ஓடிச் சென்று தப்பித்தனர் நீண்ட நேரம் போராடி காட்டு யானையை கூச்சலிட்டு வனத்துறையினர் துரத்தினர் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரம் இந்த பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post