Followers

கோத்தகிரியில் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடிகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை

 கோத்தகிரியில் சாலையில்  குட்டிகளுடன் உலா வந்த கரடிகள்  கூட்டமாக ஊருக்குள் புகுந்ததால்  பொதுமக்கள் அச்சம் வனத்துறையினர் கரடிகளை  கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை 



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. 

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் இரவு நேரங்களில் சாலையில்  குட்டியுடன் கரடிகள்  உலா வந்த நிலையில்  திடீரென கரடிகள். ஊருக்குள் புகுந்ததால்  இதனை  கிராம மக்கள்   அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர்.  கரடிகள் கிராம மக்களை  தாக்கும் முன் வனத்துறையினர்  குட்டிகளுடன்  சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில்  விட வேண்டும் என கண்ணிகா தேவி காலணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது செய்தியாளர்:கரன்சி சிவக்குமார் 

Post a Comment

Previous Post Next Post