பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா வனத்துறை சார்பில் நடைபெற்றது
வீடியோவை பார்க்க:
⬇️
https://youtu.be/HJ-Xi425alI?si=7nDpRA_DWOOPcIiP
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் கும்கியனைகள் உட்பட 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது..
வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
இந்நிலையில் இந்தாண்டு டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் யானைகளை குழிப்பாட்டி, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு முன்னதாக அங்குள்ள விநாயகரை யானைகள் துருக்கியை தூக்கி மண்டியிட்டு வணங்கியது..
பின்பு மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டபின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு ,வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது..
இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்..
மேலும் சுற்றுலா பயணிகள் கூறுகையில் வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம் ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் இங்கு ஒரே இடத்தில் 25.க்கும் மேற்பட்ட யானைகளை பார்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..
நமது செய்தியாளர் சக்திவேல்