Followers

கோவை மருதமலை வனக்கோட்டத்தில் பெண் யானைக்கு சிகிச்சை தீவிர கண்காணிப்பில் யானை குட்டி

 கோவை மருதமலை வனக்கோட்டத்தில் பெண் யானைக்கு சிகிச்சை தீவிர கண்காணிப்பில் யானை குட்டி 


 



கோவை : கோவை மாவட்டம் மருதமலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. அவ்வப்போது வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இன் நிலையில் கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு , களப் பணியாளர்களுடன் தணிக்கை செய்யப் பட்டது. அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் , குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு, உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர் அவர்களின் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்  ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை மற்றும் பழங்கள் கொடுக்க பட்டுள்ளது மேலும் யானை மற்றும் குட்டி தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளனர் 


நமது செய்தியாளர் நேசராஜ்

Post a Comment

Previous Post Next Post