Followers

2024 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்

 2024 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை   முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் 



தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா கேரளா தமிழ்நாடு மற்றும் ஆந்திர ப பிரதேசத்தின் எல்லையோட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23 முதல் 25 வரை நடத்தப்பட்டது இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வன பிரிவுகளில் நடத்தப்பட்டது இக்கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர்


 இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுத்தாய்வு செய்யப்பட்டு 26 வன பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை பாலின விகிதம் யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வாகிப்பதற்கு யானைகளின் பயன்பாட்டின் பரப்பளவு பற்றி தெளிவான விவரங்களை வழங்கும் தமிழகத்தின் யானைகளின் எண்ணிக்கையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் வெளியிட்டார்


 2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து யானைகளின் பாதுகாப்புக்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 இன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது தற்போது அதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டுக்கான யானைகளும் கணக்கெடுப்பு அறிக்கையின் படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது


 

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அகத்தியர் மலை யானைகள் காப்பகம் தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம் யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது 



இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கா .பொன்முடி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு எம். மதிவேந்தன், பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்குமார், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


நமது செய்தியாளர் :வடிவேல் 

Post a Comment

Previous Post Next Post