Followers

நீலகிரியில் புல்லட் ராஜா காட்டு யானை பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகளியாறுரில் கரோலில் அடைக்கப்பட்டது

 நீலகிரியில் புல்லட் ராஜா காட்டு யானை பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகளியாறுரில் கரோலில் அடைக்கப்பட்டது 




நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக புல்லட் ராஜா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகின்றது கடந்த ஒரு மாதத்தில் 48க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புல்லட் ராஜா என்ற காட்டு யானை சேதப்படுத்தியது.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட பொருள்களை சாப்பிட்டு  சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தன. யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


80 பணியாளர்கள் கொண்ட வனப்பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர் . சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார்  யானை மீது மயக்க ஊசியை செலுத்தினார்.


இதில் யானை மயக்கம் அடைந்த நிலையில் நடமாடியது அதனைத் தொடர்ந்து விஜய் சீனிவாசன் என்ற கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை பிடித்து லாரியை கொண்டு வந்து யானையை ஏற்றி சென்றனர் யானை அங்கிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப்  வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு கரோலில் அடைக்கப்பட்டது 


நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post