Followers

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்திடம் வாகனத்தை இயக்க வேண்டும் வனத்துறை அறிவுறுத்தல்

 வால்பாறை பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்திடம் வாகனத்தை இயக்க வேண்டும் வனத்துறை அறிவுறுத்தல் 




 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆறு வன சரகங்கள் உள்ளது இந்த வனச்சரக வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டு மாடு, மற்றும் கரடி போன்ற வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றது.


இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அடிக்கடி சாலை ஓரங்களில் உலா வந்து தண்ணீரைத் தேடி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றைய இரவு வால்பாறை சாலையில் உள்ள ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில்   காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து உலா வந்துள்ளது. அப்போது வால்பாறையில் இருந்து பழனி சென்ற அரசு பேருந்து முன் நின்றது சுதர்த்துக்கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர் லாபகமாக வாகனத்தை இயக்கி உள்ளார் இந்த காட்சி பேருந்தில் சென்ற பயணி ஒரு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது 

 பெரும்பாலும் காட்டு யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டுமென ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஆழியார் வன சோதனை சாவடியிலேயே வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வன சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் வனவிலங்குகளை கண்டால் அவைகளை அச்சுறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்க கூடாது எனவும் மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்..



நமது செய்தியாளர் சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post