Followers

வால்பாறை - முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு மாடு தாக்கி இருவர் காயம்

 வால்பாறை - முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு மாடு தாக்கி இருவர் காயம் 



கோவை மாவட்டம் வால்பாறை அருகே முக்கோட்டுமுடி எஸ்டேட் மூன்றாவது டிவிசனில் உள்ள 25 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து விட்டு உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தேயிலை பறிக்க சென்றபோது தேயிலைச்செடிக்குள் படுத்திருந்த காட்டு மாடு திடீரென்று பாய்ந்து ஓடியுள்ளது இதில் வட மாநிலமான அஸ்சாமை சேர்ந்த குனியாலி வயது 72 மற்றும் அஸித்தா கட்த்துன் வயது 19 ஆகிய இரு தொழிலாளர்களும் காயமடைந்தனர் உடனே உடனிருந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள முடீஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு


இதைப் பற்றி வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது அப்பகுதிக்கு விரைந்து சென்ற முத்துமாணிக்கம் தலைமையில் ஜான் பால் வினோத் குமார், செல்வகுமார், ரமேஷ் குமார் , விவேக் , மனித மோதல் தடுப்பு குழுவினர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க  108 வாகனத்தில் கொண்டு சென்றனர்  அதைத்தொடர்ந்து இருவரையும் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காட்டுமாடு தாக்கி காயமடைந்த இருவர் குடும்பத்தினருக்கும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆலோசனையின்படி வனவர் முத்து மாணிக்கம் தலைமையிலான பணியாளர்கள் வனத்துறை சார்பாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  


ஒளிப்பதிவாளர் வடிவேல் மற்றும்

 வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post