உதகை – 108 ஆம்புலன்ஸின் முன் யானைகள் நடை
உதகை:
உதகை அருகேயுள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து, ஒரு குழந்தையை சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பாக, ஏழு காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சாலையை கடந்து சென்றது.
இதைப் பற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள யானைகளை கண்காணித்து வருகின்றனர்
அந்த தருணம், அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.
நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்