Followers

உதகை – ஐயப்பன் கோயிலில் கரடி நுழைந்த பரபரப்பு, சிசிடிவி காட்சி வைரல்

 உதகை – ஐயப்பன் கோயிலில் கரடி நுழைந்த பரபரப்பு, சிசிடிவி காட்சி வைரல்


உலகை:

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது.

கோயில் வளாகத்திற்குள் கரடி ஒன்று நுழைந்து, அறைக்குள் புகுந்து உணவு தேடியது.


இந்நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர், கரடி அப்பகுதியில் சுற்றித்திரிவதை உறுதி செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதனால் அந்த பகுதியில் உள்ள கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.


நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post